79. அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் கோயில்
மூலவர் நீர்வண்ணன்
தாயார் அணிமாமலர் மங்கை
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் மணிகர்ணிகா தடாகம்
விமானம் தோயகிரி விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்
இருப்பிடம் திருநீர்மலை, தமிழ்நாடு
வழிகாட்டி சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ள பல்லாவரம் என்னும் ஊரைக் கடந்து சிறிது தொலைவு சென்று வலதுபுறம் திரும்பும் திருமுடிவாக்கம் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம். பல்லாவரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு. பல்லாவரத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.
தலச்சிறப்பு

Tiruneermalai Gopuram Tiruneermalai Moolavarஇது ஒரு மலைக்கோயில். திருமங்கையாழ்வார் இந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளியபோது இந்த மலையைச் சுற்றி ஊர் நீர் அரண்போல் சூழ்ந்திருந்ததால் 'திருநீர்மலை' என்ற பெயர் பெற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

இந்த கோயிலில் மலை அடிவாரத்தில் நீர்வண்ணன் சன்னதியும், மலை மீது சாந்த நரஸிம்மர், ரங்கநாதர், திரிவிக்கிரமன் என்று 4 மூலவர்கள் உள்ளனர். பகவான் நின்றான், கிடந்தான், இருந்தான், நடந்தான் என்ற நான்கு திருக்கோலங்களில் ஸேவை சாதிக்கும் ஸ்தலம் இது.

மலை அடிவாரக் கோயில் மூலவர் நீர்வண்ணன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு அணிமாமலர் மங்கை என்பது திருநாமம்.

Tiruneermalai Utsavarமலை மேல் உள்ள கோயிலில் மூலவர் சாந்த நரஸிம்மர், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.

மலைக்கோயிலில் இரண்டாவது மூலவர் ரங்கநாதர், மாணிக்க சயனம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு ரங்கநாயகி என்பது திருநாமம்.

மலைக்கோயிலில் மூன்றாவது மூலவர் திரிவிக்கிரமன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார்.

Tiruneermalai Tankவால்மீகி முனிவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மலைமீதுள்ள மூர்த்திகளை வழிபட்டு, கீழே வந்து மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நின்று ஸ்ரீராமபிரானை தியானம் செய்ய, அவர் சீதா தேவி, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன், சுக்ரீவன், கருடன், அனுமனாகக் காட்சி தந்தார். முனிவர் பிரார்த்தித்துக் கொண்டபடி நீர்வண்ணனாக இங்கு ஸேவை சாதிப்பதாக ஐதீகம். அதன்படி அடிவாரக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இராமபிரான் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொண்டைமான், பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

திருமங்கையாழ்வார் 19 பாசுரங்களும், பூதத்தாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 20 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com